மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு மரணமடையும் வரை சிறை தண்டனை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஊரடங்கு நேரத்தில் பள்ளி விடுமுறை நேரத்தில் 16 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், ஊரடங்கில் தனியாக இருந்த சிறுமியை அவரது பெற்ற தந்தையே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த ஒரு ஆண்டாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்துள்ளது.
இதனையடுத்து, சற்று முன்னர் இந்த வழக்கில் மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு அவர் மரணமடையும் வரை சிறை தண்டனை என தீர்ப்பளித்துள்ளது.
மேலும், தந்தையால் வன் கொடுமை செய்யப்பட்ட சிறுமிக்கு உடல்நலக்குறைவு காரணமாக குழந்தை இறந்தே பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…