டெல்லியில் ஓடும் பேருந்தில் பெண் ஒருவரை கற்பழித்த நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் அனைவர்க்கும் தூக்கு தண்டனை வழங்கப்பது. இதனையடுத்து வருடங்கள் பல கடந்து அதே போன்ற சம்பவம் நடந்தேறியுள்ளது.
தங்களது 16 வயது நெருங்கிய தோழியை நயவஞ்சகமாக பேசி குளிர்பானத்தில் மயக்கமருந்து கலந்து குடிக்க வைத்து 3 நண்பர்கள் சேர்ந்து கூடுபாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதைத்தொடர்ந்து அதற்கு அடுத்த நாள் 7ம் தேதி சிறுமியை அவரது வீட்டின் அருகே இறக்கவிட்டு விட்டு, இது குறித்து குடும்பத்திடமோ, போலீசாரிடமோ கூறினால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டிவிட்டு சென்றுள்ளனர்.
ஆனால் சிறுமியோ தனது தந்தையிடம் எதையும் மறைக்காமல் கூறியுள்ளார். இதனால் பதறிய தந்தை சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்து விட்டு அவர்கள் மூவர் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து விசாரணையை தொடங்கிய போலீசார் அவர்கள் மூவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதை அறிந்து அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின் பலனாக சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரையும் கைது செய்தனர். குற்றம் நடந்த காரையும் பறிமுதல் செய்தனர். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட 3 பேரிடமும் மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருவதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
நட்பு என்ற போர்வையில் ஓடும் காரில் இளம் பெண்ணுக்கு நடந்த கொடூரம் குறித்து மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பெண்களுக்கு இன்னும் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…