மேலூரை அடுத்த நா.கோவில்பட்டியில் ஆட்டோ ஓட்டி வருபவர் ரமேஷ் (வயது 40). அதே பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 9ம் வகுப்பு மாணவியை ரமேஷ் தொடர்ந்து நோட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் மாணவி தனியாக இருப்பதை உறுதி செய்து கொண்ட ரமேஷ் திடீரென்று வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.
பின்னர் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து வெளியில் சொல்லக் கூடாது என்று மிரட்டி விட்டு வெளியில் சென்றுள்ளார். இதனால் பயந்து போன மாணவி தனக்கு நேர்ந்த கொடுமையை பெற்றோரிடம் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
நாளடைவில் மாணவி உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதை உணர்ந்த பெற்றோர், அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், அவர் கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், மாணவியிடம் விசாரித்தனர். பின்னர் அழுது கொண்டே டிரைவர் ரமேஷ் செய்த கொடுமையை கூறினார்.
ஆத்திரமடைந்த மாணவியின் தாய், உடனடியாக மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததில் பலனில்லாததால், மதுரை மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் அவர் புகார் அளித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் நல குழுவினர் நடத்திய விசாரணையில் ஆட்டோ டிரைவர் ரமேஷ் 9ம் வகுப்பு மாணவியை பாலில் வன்கொடுமை செய்தது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து ரமேஷ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…