Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

மாணவிகள் பாலியல் பலாத்காரம்.. 52 வயதான பள்ளி ஆசிரியர் கைது!!

Sekar Updated:
மாணவிகள் பாலியல் பலாத்காரம்.. 52 வயதான பள்ளி ஆசிரியர் கைது!!Representative Image.

கேரள மாநிலம் கண்ணூரில் மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக 52 வயது ஆசிரியர் பைசல் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டார்.

6 மற்றும் 7ஆம் வகுப்பு படிக்கும் 5 பேரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் போலீஸார் 5 வழக்குகளை பதிவு செய்தனர். கண்ணூர் மாவட்டம், தளிபரம்பாவில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பைசல் பணியாற்றி வந்தார்.

விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் மாணவர்களிடம் விசாரணை அதிகாரிகள் பேசி வருவதாகவும் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சமீப காலமாக ஆசிரியர் மீதான பாலியல் சம்பவங்கள் அடிக்கடி வெளிவருகின்றன. கடந்த 2022 நவம்பரில் ராஜஸ்தானின் சிகாரில் அரசுப் பள்ளி ஆசிரியரால் மைனர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். 

குற்றம் சாட்டப்பட்டவர் விடுமுறையில் இருந்தபோதிலும் ஏதோ ஒரு வேலையின் காரணமாக சிறுமியை பள்ளிக்கு வரவழைத்து, சிறுமியை ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கு முன், சென்னையில், 45 வயதான அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர், தனது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக, போக்சோ சட்டத்தின் கீழ் கடந்த 2022 ஜூன் மாதம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்