தேனியில் காதல் விவகாரத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவி. காதலன் அவரது தாயார் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பின்னத்தேவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் இலங்கை ராஜா(45). செங்கல் காளவாசல் கூலித்தொழிலாளியான இவரது 17வயது மகளான பாண்டீஸ்வரி, தேனியில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதனிடையே இன்று தனது வீட்டில் பாண்டிஸ்வரி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியது.
பின்னத்தேவன்பட்டி கிராமத்தில் இருந்த பாண்டீஸ்வரி இன்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை கடிதம் ஒன்றும் அங்கு இருந்தது. அதில் தன் மரணத்திற்கு யார் காரணம் என்பதை மாணவி தன்கைபட தெளிவாக எழுதியிருந்தார்.
அந்த கடிதத்தில் தனது சாவிற்கு காரணமானவர் அதே பகுதியைச் சேர்ந்த விக்கு என்ற இளைஞரும் அவரது தாய் சுதா என குறிப்பிடப்பட்டிருந்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே மாணவியின் மரணத்திற்கு காரணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மருத்துவமனை முன்பாக அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை - தேனி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்த மறியலில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் அவ்வழியே வந்த வாகனங்களை சிறை பிடித்தும், தரையில் உருண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இது தொடர்பாக அல்லிநகரம் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில்,
பின்னத்தேவன்பட்டியை சேர்ந்த இளைஞர் விக்கு என்ற விக்ரமும், பள்ளி மாணவி பாண்டீஸ்வரியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதல் சம்பந்தமாக இருவரது பெற்றோர்களும் பேச்சுவார்த்தை நடத்தியதில், பாண்டீஸ்வரியை காதலிக்கவில்லை என விக்குவும், அவரது தாய் சுதாவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் இரு வீட்டாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் உண்டான மன விரக்தியில் இருந்து வந்த பாண்டீஸ்வரி, இன்று காலை பெற்றோர் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து மாணவியின் தந்தை இலங்கை ராஜா புகாரில், விக்கு (என) விக்ரம் அவரது தாயார் சுதா மற்றும் நண்பர்கள் பிரபு, ராமர், மனோஜ் ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் பிரச்சனையால் பள்ளி மாணவி கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…