திருப்பதியில் செம்மரக் கட்டைகள் கடத்தல் தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும், மூன்று பகுதிகளில் இருந்து 85 செம்மரக் கட்டைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பதியின் 3 பகுதிகளில் இருந்து 8 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு 85 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
4 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 1 சரக்கு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய கடத்தல்காரர்களை தேடும் பணி தொடங்கியுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.'' எனக் கூறினார்.
மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகளின் மதிப்பு ஒண்றரைக் கோடி இருக்கும் எனக் கூறப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…