கொச்சியில் நேற்று முன்தினம் இரவு, ஓடும் காரில் 19 வயது மாடல் பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக எர்ணாகுளம் தெற்கு போலீசார் 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண்ணை கைது செய்துள்ளனர்.
தகவல்களின்படி, மாடல் கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கு அருகில் உள்ள ஒரு பப்பிற்குச் சென்று குடிபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் அவளை தங்கள் காரில் அபார்ட்மெண்டிற்கு அழைத்துச் சென்று விடுவதாக கூறியுள்ளனர்.
அதை நம்பி சென்ற அவர், தனது வீட்டிற்கு செல்லும் வழியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண் காக்கநாட்டில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பு அருகே விடுவிக்கப்பட்டார்.
இதையடுத்து மாடல் அழகி தற்போது களமசேரி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…