மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஷானாஸ் காதுன் (22) என்ற பெண்ணும், யாஸ்மினா பிபி என்ற பெண்ணும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஷானாஸ் காதுனுக்கு 8 மாதத்தில் கைக்குழந்தை ஒன்று இருந்தது. இவர்கள் ராஜர்ஹத் என்ற பகுதியில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர் இவர்கள் இருவருக்கும் வாய்த்தகராறு நடந்துள்ளது, அப்போது சண்டை பெரிதாகியுள்ளது. இந்நிலையில் ஷானாஸ் வைத்திருந்த அவரது 8 மாத கைக்குழந்தையை இழுத்து பறித்த யாஸ்மினாவும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் தரையில் வீசியுள்ளனர்.
இதனால் குழந்தையின் தலையில் அடிபட்டுள்ளது, குழந்தையை மீது மருத்துவமனையில் சேர்த்து தீவிரமான சிகிச்சை அளித்துவந்தனர். மேலும் அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் யாஸ்மினா, சாந்தினி உள்ளிட்ட 4 போலீசார் கொலை வழக்கில் தற்போது கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து தீவிரமாக சிகிச்சை அளித்துவந்த நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த 4 பேரையும் கொலை வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…