Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

பேருந்து மோதி கோர விபத்து… சிறுமி உட்பட 3 பேர் உயிரிழப்பு…. 7 பேர் கவலைக்கிடம்..

Gowthami Subramani November 10, 2022 & 13:10 [IST]
பேருந்து மோதி கோர விபத்து… சிறுமி உட்பட 3 பேர் உயிரிழப்பு…. 7 பேர் கவலைக்கிடம்..Representative Image.

ஜம்மு காஷ்மீரில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுமி உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில் இருந்து, கத்துவா மற்றும் ஹரித்வார் பகுதிகளுக்கு இரண்டு பேருந்துகள் பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது, பதான்கோட் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ஒன்றன் பின் ஒன்றாக பேருந்துகள் சென்று கொண்டிருந்தது. இதில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்துகள் ஒன்றன் மீது ஒன்றாக மோதிக் கொண்டது.

இந்த விபத்தில் முன்னே சென்ற பேருந்து மிக அதிக அளவில் சேதமடைந்தது. இதில் சிறுமி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 17 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அதில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்