Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

வனத்துறை அடிமடியிலே கைவைத்த மர்ம கும்பல்; தீவிர தேடுதலில் போலீஸ்! 

KANIMOZHI Updated:
வனத்துறை அடிமடியிலே கைவைத்த மர்ம கும்பல்; தீவிர தேடுதலில் போலீஸ்! Representative Image.

கல்வராயன் மலையில் உள்ள வனத்துறை அலுவலகத்தில்  15 ஆண்டுகளாக வளர்ந்து வந்த சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. 


கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் இந்நாடு வன சரக்கத்திற்கு உட்பட்ட  கரியாலூர் பிரிவு வனவர் அலுவலகம் கரியாலூர் கிராமத்தில் செயல்பட்டு வருகிறது இந்த அலுவலகத்தின் வளாகத்திற்குள் 15 ஆண்டுகளாக வனத்துறையினர் வளர்ந்து வந்த சந்தன மரத்தை மர்ம நபர்கள் நேற்று இரவு அடியோடு வெட்டி கடத்திச் சென்றுள்ளனர். 

இதுகுறித்து வனத்துறை அலுவலர் வேல்முருகன் கரியாலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் கரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். வனத்துறை அலுவலகத்திற்குள் எந்த நேரமும் பாதுகாப்பு பணியில் வனத்துறையினர் இருக்கும் இடத்திலிருந்த சந்தன மரத்தை மர்மநபர்கள் வெட்டி சென்றது வனத்துறை அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்