டெல்லியில், ஆனந்த் பர்பத் பகுதியயைச் சேர்ந்த 20 வயது இளைஞன், தனது முடங்கிப் போன தந்தையைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் 45 வயது மதிக்கத்தக்க ஜிதேந்திர சர்மா என்பவர், வீட்டிலேயே உயிரிழக்கப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்த போது மகன் சுமித் அவரைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, போலீசார் சுமித்-ஐக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இது குறித்து சுமித் போலீசாரிடம் தெரிவித்ததாவது, “தானும், தனது தந்தையும் நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். அவரால் நடக்க முடியாது என்பதால், அவரைத் தனியாகக் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சுமித் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று, மகனும், தந்தையும் மது அருந்தியதாகவும், மாலையில் அவரது தந்தை படுக்கையில் சிறுநீர் கழித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்து சுமித் அவரது கழுத்தை நெரித்துக் கொன்றதாக தெரிவித்தார்.
படுக்கையில் சிறுநீர் கழித்ததற்காக, பெற்ற மகனே தந்தையைக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…