ஆந்திர மாநிலம் குண்டூரை மாவட்டத்தை சேர்ந்த வியாபாரி வர்மா என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு பைனான்சியர் ஒருவரிடம் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இதனையடுத்து, வட்டியுடன் முழு பணத்தையும் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கடன் தொகை நிலுவை உள்ளதாக வர்மாவிடம் பைனான்சியர் பணம் கேட்டு அவரது வீட்டிற்கு சென்று மிரட்டியுள்ளார். இதனால் மனஉளைச்சலில் இருந்த வர்மா நேற்று இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்த காவல்துறையினர் வர்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமணைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வர்மா எழுதியுள்ள கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் தனது இக்கட்டான நிலை குறித்து உருக்கமாக எழுதியுள்ளார். மேலும், பைனான்சியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதியுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…