ஒரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காத நண்பனை கொலை செய்த வழக்கில்
சிறையில் இருக்கும் இளைஞர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க ரயில்வே இருப்புபாதை போலீசார் பறிந்துரைத்ததன் பேரில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், மூவலூர் வடக்குத் தெருவைச் சேர்ந்த ராஜலிங்கம் என்பவரது 20 வயது மகன் ராஜ்குமார், கட்டுமானத்துறையில் சித்தாளாக வேலை செய்து வந்தார். இவரை கடந்த அக்டோபர் 29ம் தேதி மயிலாடுதுறை சித்தர்காடு தெற்குவீதியைச் சேர்ந்த குருமூர்த்தி மகன் கபிலன்(22) என்பவரும், குத்தாலம் மகாதானபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவரும் சேர்ந்து மயிலாடுதுறை அருகே மஞ்சளாறு ரயில்வே தன்டவாளத்தில் கொலை செய்து, தண்டவாளத்தில் வீசிச்சென்ற வழக்கில் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மயிலாடுதுறை இருப்புப் பாதை போலீஸார் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் கபிலனுக்கும், பள்ளி மாணவருக்கும் ஓரினச் சேர்க்கை பழக்கம் இருந்து வந்துள்ளதும், ராஜ்குமாருக்கு மது கொடுத்து அவரையும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்தி, அதற்கு அவர் ஒத்துழைக்காததால் கொலை செய்ததும் தெரியவந்தது.
இதனிடையே இருப்புப் பாதை காவல் கண்காணிப்பாளர் அதி வீரபாண்டியன் பரிந்துரையின் பேரில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா கபிலனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைக்க உத்தரவிட்டார். கபிலன் திருச்சி மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…