Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வெவ்வேறு இடத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைகள்...குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை..!

madhankumar June 22, 2022 & 16:01 [IST]
வெவ்வேறு இடத்தில் நடந்த பாலியல் வன்கொடுமைகள்...குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை..!Representative Image.

கரூர் மாவட்டம் திருமநிலையூர் பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரி மேகநாதன். இவர் அப்பகுதியை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திச்சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து மாணவியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் மேகநாதன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதனையடுத்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதே போல் புதுச்சேரியை சேர்ந்த கலியபெருமாளும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவியும் காதலித்து வந்த நிலையில், கடந்த 2019 ஆம் ஆண்டு அந்த பெண்ணை கடத்தி சென்று வாலிபர் பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கலியபெருமாளை கைது செய்த போலீசார் புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் சமூக பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்