Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

காலையில் பெண் பார்த்து மாலையில் திருமணம்...இரண்டு நாளில் கம்பி நீட்டிய மனைவி..!

madhankumar June 18, 2022 & 16:12 [IST]
காலையில் பெண் பார்த்து மாலையில் திருமணம்...இரண்டு நாளில் கம்பி நீட்டிய மனைவி..!Representative Image.

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்தவர் தமிழ்வாணன் 32 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை இதனால் வெறித்தனமாக பெண் பார்த்துக்கொண்டிருந்துள்ளார்.

இந்த நிலையில் இவருக்கு புரோக்கர் மகேஷ் அறிமுகமாகியுள்ளார், அப்போது எனக்கு தெரிந்தஒரு பெண் உள்ளது என மகேஷ் கூறியுள்ளார். இதனால் ஆர்வமான தமிழ்வாணன் உடனே பெண்ணை பார்க்கவேண்டும் என கூறியுள்ளார். இதனையடுத்து விருதுநகர் முருகன் கோவில் ஒன்றில் வைத்து பூஜா என்ற பெண்ணை 2 புரோக்கர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அப்போது இருவருக்கும் பிடித்துப்போக, இன்றே திருமணத்தை வைத்துக்கொள்ளலாம் என பூஜாவின் பெற்றோர்கள் கூற அன்று மாலை பூஜாவின் பெற்றோர் மற்றும் தமிழ்வாணன் பெற்றோர் மட்டும் இணைந்து அதே கோவிலில் வைத்து திருமணத்தை நடத்தியுள்ளனர். காலையில் பெண் பார்த்து மாலையில் திருமணம் செய்துள்ளனர்.

மறுநாள் தன்னுடைய உறவினர்களுக்கு பூஜாவை அறிமுகப்படுத்தியுள்ளார் தமிழ்வாணன், பின்னர் அதற்கடுத்த நாள் பூஜாவை அழைத்துக்கொண்டு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள கடை ஒன்றில் பொருட்கள் வாங்கிவிட்டு இறங்கும்போது நகரும் படிகட்டில் (எஸ்கலேட்டர்) தமிழ்வாணன் ஏறியுள்ளார். 

ஆனால், எஸ்கலேட்டரில் ஏறுவது தனக்கு பயமாக இருக்கிறது என்று சொல்லி, பூஜா படிக்கெட் வழியாக கீழே இறங்கி வருவதாக கூறி சென்றுள்ளார்.. அதற்கு பிறகு பூஜாவை காணவில்லை.. போன் செய்தால், "நான் என் வீட்டிற்கு வந்துவிட்டேன்" என்று சொல்லி உள்ளார்.. இதைக் கேட்டதும், அதிர்ந்துபோன மகேஷ், வீட்டிற்கு சென்று பார்த்தபோது, 10 ஆயிரம் ரூபாய் பணமும், பீரோவிலிருந்த 10 சவரன் தங்க நகைகளும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.. இதையடுத்து, போலீசில் பூஜா மற்றும் 2 புரோக்கர்கள் குறித்து புகார் தந்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட தமிழ்வாணன் சொல்லும்போது, "திருமணத்திற்கு 1.5 லட்சம் தர வேண்டும் பேரம் பேசிய நிலையில், கையில் இருந்த 1.35 லட்சம் அப்பொழுதே கொடுத்துவிட்டேன்.. மீதமுள்ள 15 ஆயிரத்தை கொடுக்கவில்லை என்றால் முதலிரவு நடக்க விடமாட்டோம் என்று புரோக்கர்கள் என்னை மிரட்டினார்கள். பின்னர் முதலிரவு அறைக்கு சென்றபோது எனக்கு மது பாட்டில் வேண்டும் என கூறினார். அதற்கு நான் நீ திருமணத்திற்கு முன்னர் எப்படி வேண்டுமானாலும்  குடிக்கக்கூடாது என கூறி கெட்ட பழக்கத்தை கைவிடும்படி கூறினேன். அதற்கு அவர் தன்னுடைய செல்போனில் இருந்து ஒரு விடியோவை காட்டினார் அதில் பூஜாவும் அவரின் அக்காவும் மது அருந்தியது போல் இருந்தது.

இதனால் பூஜா தனது உறவினர்களிடம் தான் அவரை  கொடுமை படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளார். திருமண நாள் அன்றே 10ரூபாய்க்கு உடை வாங்கிக்கொடுத்த நானா இப்படி கொடுமை படுத்துவேன் என கூறியுள்ளார். 

திருமணமான இரண்டு நாட்களில் 10 ஆயிரம் ரூபாய்க்கு புத்தாடை எடுத்து தரும் நான், சாப்பாடு கொடுத்திருக்க மாட்டேனா? என் மேலே இப்படி அபாண்டமாக பொய் சொல்லிவிட்டாள்.. திருமணம் என்ற பெயரில் பணம் மோசடி செய்யும் இதுபோன்ற கும்பலை போலீசார் பிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.. எனக்கு நேர்ந்ததுபோல் வேறு யாருக்கும் இதுபோன்ற நடக்ககூடாது" என்று வேதனையுடன் சொன்னார் தமிழ்வாணன்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்