Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஹெராயின் தருவான்னு...நம்பி வாங்குனாப்ல...ஆனா இப்படி ஆகி போச்சே! கோலமாவு கோகிலா...

Priyanka Hochumin October 13, 2022 & 10:10 [IST]
ஹெராயின் தருவான்னு...நம்பி வாங்குனாப்ல...ஆனா இப்படி ஆகி போச்சே! கோலமாவு கோகிலா...Representative Image.

விற்பதற்கு ஹெராயின் வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணம் தந்து தன்னுடைய தலையில் தானே மண்ணை வாரி போட்டுள்ளார் தூத்துக்குடிகாரர்.

சென்னை போரூரைச் சேர்ந்த இப்ராஹிம், தூத்துக்குடியைச் சேர்ந்த கற்குவேல் அய்யனார் இருவருக்கும் போதைப் பொருள் விற்பனையின் போது நட்பு ஏற்பட்டுள்ளது. ஒரு முறை லாட்ஜில் சந்திக்கும் போது, தன்னிடம் போதைப் பொருள் இருப்பதாகவும், அதனை விற்பனைக்கு பயன்படுத்தி கொள்ளுமாறும் இப்ராஹிமிடம் இருந்து ரூ. 10/- லட்சம் வாங்கியுள்ளார் கற்குவேல். அவரும் கற்குவேல் அக்கவுண்டிற்கு பண்ணத்தி கை மாற்றியுள்ளார். ஆனால் பிறகு தான் தெரிய வந்தது நம்ப கோலமாவு கோகிலா படத்தை போலவே கற்குவேல் போதை பொருளுக்கு பதிலாக உப்பு பொட்டலத்தை இப்ராஹிமிடம் கொடுத்து ஏமாற்றியுள்ளார்.

என்னடா இது இப்படி ஏமாந்துட்டோம் என்று கடுப்பான தன்னுடைய நண்பர்கள உதவியுடன் கற்குவேலை சென்னைக்கு கடத்தி வந்துள்ளனர். ஆனால் எப்படியோ அவர்களிடம் இருந்து கற்குவேல் சாமர்த்தியமாக தப்பித்துள்ளார். இதனை அடுத்து காவல் நிலையத்தில் இராஹிம் புகார் அளித்துளளார். அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரணையை தொடங்கிய போலீசார் பணகுடியில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்த கற்குவேல் அய்யனார், அவருடைய கூட்டாளிகள் தாம்சன், அலெக்ஸ் பிரபாகர் ஆகியோரைக் கைது செய்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்