Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

டியூசனுக்கு சென்ற 10 வயது சிறுமி தண்ணீர் தொட்டிக்குள் சடலமாக கண்டெடுப்பு.. 

Nandhinipriya Ganeshan October 12, 2022 & 12:17 [IST]
டியூசனுக்கு சென்ற 10 வயது சிறுமி தண்ணீர் தொட்டிக்குள் சடலமாக கண்டெடுப்பு.. Representative Image.

கர்நாடகா: கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கட்டிடத்தில் உள்ள தண்ணீர் சம்ப்க்குள் 10 வயது சிறுமியின் சடலம் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. போலீசார் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாண்டியா மாவட்டம் மலவல்லி நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்த 10 வயது சிறுமி, தனது டியூஷன் வகுப்புகளுக்குச் செல்வதற்காக செவ்வாய்க்கிழமை மாலை தனது வீட்டிலிருந்து சென்றுள்ளார். இருப்பினும் தகவல்களின் படி அவர் அங்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், அக்டோபர் 11 ஆம் தேதி மாலை அவ்வழியே உள்ள கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் கட்டிடம் ஒன்றின் தண்ணீர் சம்ப்க்குள் சிறுமியின் உடல் சடலமாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிறுமியை வழிநடத்திய டியூஷன் ஆசிரியர் காந்த ராஜு (வயது 45) விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பேசிய மாண்டியா கண்காணிப்பாளர் பி வேணுகோபால், 'சிறுமியின் உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் இது கொலையா? இல்லை விபத்தா? என விசாரணை மேற்கொள்ளப்படும்' என்று தெரிவித்துள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்