Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விளாங்குடியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பெண் தொழிலாளி பலி

Baskarans Updated:
 விளாங்குடியில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி பெண் தொழிலாளி பலிRepresentative Image.

 மதுரை: விளாங்குடி பகுதியில் கட்டிட இடிபாடுகளுக்கு சிக்கி ஒரு பெண் தொழிலாளி பலியானார்.

மதுரை மாநகராட்சி 20ஆவது வார்டுக்கு உட்பட்ட விளாங்குடி சொக்கநாதபுரம் 1 ஆவது தெரு பகுதியில் தமிழ் முரசு என்பவர் மதி என்ற பில்டிங் காண்டிரக்டரிடம் வீடு கட்டும் ஒப்பந்தம் செய்து வீடு கட்டி வந்தார்.

இந்த பணியில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரெட்டியப்பட்டியை சேர்ந்த 4 தொழிலாளர்கள் இன்று கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்த போது மாடிக்கு செல்வதற்கான படி கட்டுமான பணியின் போது கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

அப்போது எதிர்பாராதவிதமாக தொழிலாளர்கள் இடிபாட்டுக்கு சிக்கி தவித்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் காவல் துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் அவர்கள் விரைந்து வந்து மீட்பு பணியை துவக்கினர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் ரெட்டியப்பட்டியை சேர்ந்த மூக்காயி - 52 இடிபாடுகளில் சிக்கி இறந்துவிட்டார். ரெட்டியப்பட்டியை சேர்ந்த மலையாண்டி மகன் தொண்டிச்சாமி கட்டையன், ஜோதி ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.அவர்கள் உடனடியாக மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்