தென்காசியில் வழக்கறிஞர் அசோக்குமார் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தூத்துக்குடி வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசியில் வழக்கறிஞர் அசோக்குமார் உட்பட 2 பேரை சொத்துத் தகராறில் ராணுவ வீரர் வெட்டிக்கொலை செய்தார். இந்த படுகொலை சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கறிஞர்கள் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வழக்கறிஞர் அசோக்குமார் உள்ளிட்ட 2 பேரை கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் பிரபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் காவல்துறையை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். தமிழகத்தில் தொடர்ந்து வழக்கறிஞர்கள் படுகொலை செய்யப்பட்டு வருவதால், தமிழக அரசு உடனடியாக வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய சட்டத்தை சட்டமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…