விருத்தாசலம் அருகே திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனம் மோதியதில் 4 வயது சிறுமியின் தாயின் கண் முன்னே உயிரிழந்த சம்பவம் பெரும் போராட்டம் வெடிக்க காரணமாக அமைந்துள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கறிவேப்பிலங்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் அதிமுக சார்பில் திமுக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் விருத்தாசலம் அதன் சுற்றுவட்டார பகுதியில் 30க்கும் மேற்பட்ட டாடா ஏசி வாகனத்தின் மூலம் ஏராளமான கட்சி தொண்டர்களை ஏற்றி வந்தனர் பின்னர் கூட்டம் முடிந்த பிறகு அனைவரையும் அந்தந்த பகுதிகளில் இறக்கிவிடுவதற்காக டாட்டா ஏசி மூலம் திரும்ப அழைத்துச் சென்றனர்.
இந்நிலையில் விருத்தாச்சலம் அடுத்த வண்ணான்குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த நீலகண்டன் சங்கரி இவர்களது இரண்டாவது மகளான 4 வயது சிறுமி சமித்தா, தனது தாயுடன் சாலை ஓரத்தில் நடந்து வந்துள்ளார். அப்போது கூட்டத்திற்கு வந்த பொதுமக்களை இறக்கிவிட்டு வந்து கொண்டிருந்த டாடா ஏசி வாகனம் அதிவேகமாக சிறுமி மீது மோதியது. இதில் தாயின் கண் முன்னே சிறுமி, ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.
உடனடியாக அங்கிருந்த மக்கள் குழந்தையை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இச்சம்பவம் குறித்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…