கேரளாவில் மாவட்ட ஆட்சியர் ஒருவர் கனமழை காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து பேஸ்புக்கில் வெளியிட்டுள்ள பதிவு சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கேரளாவில் கடந்த சில தினங்களாக மாநிலத்தின் பல பகுதிகளிலும் கனமழை புரட்டிப்போட்டு வருகிறது. இதனால் பல்வேறு மாவட்ட ஆட்சியர்களும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து வருகின்றனர். அந்த வகையில் ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.கிருஷ்ண தேஜா தனது முகநூல் பக்கத்தில், மாணவர்களுக்கு அன்போடு பகிர்ந்து வரும் அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிப்புகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அவர் தனது முகநூல் பதிவில், "அன்புள்ள குழந்தைகளே, நாளையும் நான் விடுமுறை அளித்துள்ளேன் என்பதை கூறிக் கொள்கிறேன். நேற்று நான் சொன்னதை மறந்துவிடாதே. மழைக்காலம் என்பதால், உங்கள் பெற்றோர்கள் வேலைக்குச் செல்லும் போது, அவர்களது பைகளில் குடை மற்றும் ரெயின்கோட் உள்ளதா என்பதை நீங்கள் தான் உறுதி செய்ய வேண்டும்.
அவர்களை வேலைக்கு வழி அனுப்பும் போது கட்டாயம் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து வழி அனுப்புங்கள். நாங்கள் இங்கேயே உங்களுக்காக காத்திருப்போம், கவனமாக வாகனம் ஓட்டி சென்று விட்டு மாலையில் சீக்கிரமாக வீடு திரும்பி வாருங்கள் எனக் கூறி அன்போடு பெற்றோருக்கு வழி அனுப்புங்கள்.
நீங்கள் தொடர்ந்து நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். புத்திசாலியாக இருங்கள்.
மிகுந்த அன்புடன்
உங்கள் பிரியமான கலெக்டர் மாமா." எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாணவர்களுக்கு இவ்வாறு பாசத்துடன் எழுதும் அவரது அதிகாரப்பூர்வ பதிவுகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மாவட்ட ஆட்சியரின் இந்த போஸ்ட்டுக்கு மட்டும் சுமார் 57,000த்துக்கும் மேற்பட்ட லைக்குகள், 3,800க்கும் மேற்பட்ட ஷேர்கள் கிடைத்துள்ளன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…