Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஒரு வாய்ப்பு கொடுங்கள்..! ஊழல் செய்த அனைவரும் சிறையில் இருப்பார்கள்..!! - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

Saraswathi Updated:
ஒரு வாய்ப்பு கொடுங்கள்..! ஊழல் செய்த அனைவரும் சிறையில் இருப்பார்கள்..!! - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்  Representative Image.

தமிழகத்தில் ஆட்சி செய்ய பாஜகவுக்கு ஒரே ஒரு முறை வாய்ப்பளித்து பாருங்கள், ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் பாஜகவின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டு பேசினார். அப்போது, நாட்டில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய் தமிழ் மொழி. தொன்மைவாய்ந்த அழகில் தமிழ்மொழியில் பேச எனக்கும் ஆசைதான். தமிழ் தெரியாததால், என் தாய்மொழியான இந்தியில் பேசுகிறேன்.  சித்தர்கள், ஆழ்வார்கள், திருவள்ளுவர் பிறந்த பூமி இது.  தமிழகத்தின் ராஜராஜ சோழனும், சேரர்களும் கடற்படையில் திறமையாக விளங்கியவர்கள்.  

பாஜக மக்களின் வளர்ச்சிக்காக கட்சி நடத்துகிறது. ஆனால், பிற கட்சிகள் ஆட்சியை பிடிப்பதற்காக நடத்துகின்றன. தமிழகத்தில் திமுகவின் ஊழல் ஆட்சியை நாடே அறிந்திருக்கிறது. தமிழகத்தில் ஒரே ஒருமுறை பாஜகவை ஆட்சியில் அமர்த்துங்கள். ஊழலற்ற ஆட்சியை தருகிறோம். பாஜகவை ஆட்சி அமைந்தால்,  தமிழகத்தில் ஊழல் செய்தவர்கள் அனைவரும் சிறையில் இருப்பார்கள்.

செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார். ஜனநாயகத்தை முடக்குவதாக பேசுவதோடு,  புலனாய்வு அமைப்புகளின் பணிகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்புகிறார். இதே செந்தில் பாலாஜி அதிமுகவில் இருந்தபோது அவரை ஊழல்வாதி என்று கூறிய ஸ்டாலின், அவரை உடனே கைது செய்யவேண்டும் என்று அப்போது பேசினார்.

தமிழகத்தில் அதிமுகவுடன் கூட்டணியில் பாஜக இருக்கிறது. கூட்டணி தர்மப்படி அதிமுகவுக்கு உரிய மரியாதை அளிக்க தயாராக இருக்கிறோம். மத்தியில்  வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சி முதல்முறையாக அமைந்தபோது, அவருக்கு உறுதுணையாக இருந்தவர் ஜெயலலிதா என்பதை பாஜகவினர் ஒருபோதும் மறக்கமாட்டோம்.   அதிமுக-பாஜக கூட்டணி கட்டாயத்தால் அமைந்தது அல்ல, அர்ப்பணிப்பினால் உருவானது. அண்ணாமலை தமிழகத்தின் தலைவர் மட்டுமல்ல.  ஒட்டுமொத்த இந்தியாவின் தலைவராக அவர் வளர்ந்து வருகிறார். 

இவ்வாறு அவர் பேசினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்