தமிழக அரசு பள்ளிக்கூடங்களுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என பல நாட்களாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பரிசீலித்துள்ளார். அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களின் அருகாமையில் உள்ள மதுக்கடைகளை அகற்றும் பணி தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழகத்தில் மக்களுக்கு இடையூறாக உள்ள அனைத்து மதுக்கடைகளையும் அகற்ற வேண்டும் என்பது தமிழக அரசின் முடிவு என தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…