குடியாத்தம் அருகே முனீஸ்வரன் கோவிலில் இருந்த மூலவர் கல் சிலையை கடத்தி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தில் காளியம்மன் கோவில் அருகாமையில் முனீஸ்வரன் கோயிலில் கடந்த மூன்று ஆண்டுகளாக பக்தர்கள் வழிபட்டு வந்தனர். முனீஸ்வரன் கோவிலில் நேற்று இரவு மர்ம நபர்கள் கோவிலில் இருந்த முனீஸ்வரர் மூலவர் சிலையை திருடி சென்றுள்ளனர். மேலும் அங்குள்ள சிலைகளை சேதப்படுத்தி உள்ளனர்.
அவ்வழியாக சென்ற பக்தர்கள் மூலவர் சிலை இல்லாததையும் சிலைகளை சேதப்படுத்தியதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பரதராமி காவல்துறையினருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். இதன்பேரில் அங்கு வந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.
ஊர் பொதுமக்களிடம் புகார் பெற்றுக் கொண்டு சிலை கடத்தல் வழக்கு பதிவு செய்யும்படி பரதராமி போலீசாருக்கு டிஎஸ்பி உத்தரவிட்டுள்ளார். சாலையோரம் உள்ள முனிஸ்வரன் கோவிலின் சிலைகளை உடைத்து சிலைகள் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…