Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இராணுவ அதிகாரி தூக்கிட்டு தற்கொலை..

Nandhinipriya Ganeshan September 29, 2022 & 10:00 [IST]
இராணுவ அதிகாரி தூக்கிட்டு தற்கொலை..Representative Image.

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 44). இவர், ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் அருகில் உள்ள கோபால்பூரில், இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வந்தார். அவருக்கு சங்கீதா என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ராணுவ அதிகாரியான சசிகுமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நண்பர்கள் மூலம் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்ததுள்ளது. இதையடுத்து, சசிகுமாரின் சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினர் சிலர் கோபால்பூர் சென்றனர். மேலும், போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இராணுவ அதிகாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்