Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கூலிப்படையை வைத்து தம்பியை கொல்ல முயற்சி...அம்பலமான அக்காவின் உண்மை முகம்.!

madhankumar June 03, 2022 & 12:47 [IST]
கூலிப்படையை வைத்து தம்பியை கொல்ல முயற்சி...அம்பலமான அக்காவின் உண்மை முகம்.!Representative Image.

திண்டுக்கல் மாவட்டம் பாறைப்படியை சேர்ந்த 24வயது வாலிபர் சூர்யா இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்களால் அரிவாள் கொண்டு சரமாரியாக வெட்ட பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர்.

இதனிடையே சூர்யாவின் சித்தி மகளான மனிஷா (25) விஷம் அருந்திவிட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் விஷம் ஏதும் அருந்தவில்லை என மருத்துவர் சொன்னதால் சூர்யா வழக்கை விசாரித்து வந்த போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதனையடுத்து மனிஷாவிடம் விசாரணை நடத்திய பொது அரசியல் பிரமுகர் ஒருவர் தனக்கு காதல் தொல்லை கொடுப்பதாக கூறிய அவர் அதனால் தன விஷம் அருந்தினேன் என கூறியுள்ளார். அனால் மருத்துவர்கள் உறுதியாக அவர் விஷம் கொடுக்க விலை என கூறியுள்ளனர்.

பின்னர் மனிஷாவின் செல்போனை கைப்பற்றி சோதனையிடத்தில், அதில் சர்தார் என்ற நபருடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். அவரை பிடித்து விசாரித்ததில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியே வந்தன. 

மனிஷாவின் கணவர் கடந்த சில ஆண்டுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டுள்ளார், இதனால் மனிஷா தனியாக வாழ்ந்துவந்துள்ளார், அப்போது சார்தருடன் தொடர்பு ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. அப்போது இதுகுறித்து அறிந்த மனிஷாவின் தம்பி சூர்யா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மனிஷா  சூர்யாவை கொலை செய்துவிடலாம் என சர்தாரிடம் கூறியுள்ளார். 

இதற்கு ஒப்புக் கொண்ட சர்தார் தனது நண்பர்களான யோகராஜ், கவுதம், ரியாஸ் ஆகியோரின் உதவியுடன் சூர்யாவை சரமாரியாக வெட்டி கொலை செய்ய முயற்சித்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக சூர்யா உயிர் தப்பியுள்ளார். எங்கே தான் மாட்டிக் கொள்வோமோ என்று பயந்த மனிஷா தற்கொலை நாடகமாடியது அம்பலமானது.

சர்தாரின் வாக்குமூலத்தின்படி மனிஷா, மற்றும் சர்தாரின் நண்பர்கள் ஆகியோரை கைது செய்த போலீசார் கொலைக்கு உடந்தையக இருந்த மனிஷாவின் சகோதரி சீமா தேவியையும் கைது செய்துள்ளார். மேலும் மனிஷாவின் கணவர் கொல்லப்பட்டதையும் அறிந்த போலீசார் அந்த வழக்கையும் கையிலெடுத்துள்ளனர். கள்ளகாதலுக்காக தமியை ஆட்களை ஏவி கொலை செய்ய துணிந்த அக்காவால் திண்டுகளில் பரபரப்பு நிலவி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்