தமிழகத்தில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை வரும் 29ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, சென்னை- நெல்லை இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, இந்த சிறப்பு ரயிலானது நாளை இரவு 11.15 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து (வண்டி எண் : 06052) புறப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுமார்க்கமாக நெல்லையிலிருந்து (வண்டி எண் : 06051) 29-ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு புறப்படுகிறது. சென்னை-நெல்லை இடையே இருமார்க்கத்திலும் இயக்கப்படும் இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…