ரேஷன் கடைகளில் இன்றே ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்களை வாங்கிவிடுங்கள். ஏனெனில் நாணலை முதல் ரேஷன் கடை ஊழியர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் கடை ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர், இதனால் ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
ரேஷன் கடை பணியாளர்கள், அகவிலைப்படி உயர்வு, நியாய விலைக் கடைகளுக்கு தனித்துறை, பொட்டல முறை என்பது உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தொடர்ந்து 7,8,9 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் கடைபிடிக்கப்பபோவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து திருச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் 3 நாள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து ஜூன் 13 ஆம் தேதி முதல் தொடர் வெள்ளி நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.
எனவே 7ம் தேதி முதல் 8,9 ஆகிய 3 நாட்களைத் தொடர்ந்து மே 13ம் தேதியும் தொடர் கடையடைப்பு போராட்டம் நடைபெற இருப்பதால் நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வினியோகம் முற்றிலும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றே பொருட்களை வாங்கி வைத்துக்கொள்வது நல்லது என கூறிவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…