குட்கா வழக்கில் தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், பி. வி. ரமணா, உள்ளிட்ட 12 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிவி ரமணா உள்ளிட்ட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசிடம் சிபிஐ அனுமதி கோரியது. இந்நிலையில், சிபிஐக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதனையடுத்து, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும், முன்னாள் அமைச்சர்களான சி விஜயபாஸ்கர் மற்றும் பிவி ரமணா ஆகிய இருவருமே தற்போது எடப்பாடி பழனிச்சாமி அணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…