போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் ஐந்தரை கிலோ கஞ்சா சாக்லேட் மற்றும் 25 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாம்பழப்பட்டு ரோடு ஆட்டோ ஸ்டாண்ட் அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ், தலைமையில் மாம்பழப்பட்டு ரோடு ஆட்டோ ஸ்டாண்ட் அருகே சென்று தணிக்கை செய்ததில்
சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்துள்ளனர்.
பாண்டிச்சேரி திருபுவனை திருமுருகன் நகர் பகுதியைச் சேர்ந்த அஜய் குமார், அதே ஊரில் வசிக்கும் பலராமன் பாரிக் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் படாலத்தைச் சேர்ந்த உக்ரேசன் பாரிக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஜார்மினால் கோல்டு கஞ்சா சாக்லேட் ஐந்தரை கிலோ மற்றும் குட்கா 25 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கபட்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…