நகை மற்றும் பணத்திற்காக நாடகமாடி 21க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய தனியார் வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியை சேர்ந்த கார்த்திக் ராஜா, இவர் அதேபகுதயில் தனியார் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கார்த்திக் ராஜாவிற்கும் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வல்லம்பட்டியை சேர்ந்த ஜான்சிராணி என்ற 20 வயது இளம் பெண்ணுக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் ஆகியுள்ளது.
இந்நிலையில் வேலை விஷயமாக வெளியூர் செல்லவதாக கூறி பணத்தேவைக்காக அவரிடம் இருந்த 5 சவரன் செயினை வாங்கிக்கொண்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவரை பற்றி எந்த தகவலும் இல்லாத காரணத்தால் ஜான்சிராணி ஏழாயிரம்பண்ணை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் வெம்பக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் நம்பிராஜான் தலைமையில் தனிப்படை அமைக்கபட்டு போலீஸார் கார்த்திக்ராஜாவை தேடி வந்தனர். இதையடுத்து கார்த்திக்கராஜா திருவண்ணாமலை மாவட்டம் பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீஸார் கார்த்திக்ராஜாவை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து கார்த்திக்ராஜாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கார்த்திக்ராஜா பல்வேறு பகுதியில் 21க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததும்,மேலும் 80பவுன் நகைக்கு மேல் பெண்களிடமிருந்து ஏமாற்றியதும் தெரிய வந்தது.
இதில் ஜான்சிராணியிடமிருந்து ஏமாற்றிய 5 பவுன் தங்க நகைகளை மட்டும் ஏழாயிரம்பண்ணை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.மேலும் கார்திக்ராஜாவின் மீது கோவை,சாத்தூர்,ஏழாயிரம்பண்ணை,விழுப்புரம் உள்ளிட்ட 19க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பெண்களை ஏமாற்றிய வழக்குகள் உள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…