இந்திய பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நள்ளிரவில் இந்தியாவில் புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.100 ஆகிய நோட்டுகளை மதிப்பிழக்கச் செய்யும் அறிவிபை பிரதமர் மோடி அறிவித்தார்.
இந்நிலையில், இந்த நோட்டுகளுக்கு பதிலாக 200, 500, 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், இந்தியாவில் பண மதிப்பிழப்பால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டாலும் கள்ள நோட்டுப் புழக்கத்தை குறைக்கும் விதமாக இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்தியாவில் பணமதிப்பிழப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து பல விமர்சனங்கள் முன் வைத்தனர். இந்நிலையில், மத்திய நிதியமைச்சகம் இன்று ஒரு முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், கடந்த 2016-17 ஆம் ஆண்டுகளில் 43.46 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டது. இந்நிலையில், 2021-22 ஆம் ஆண்டில் 8.25 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…