Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பண்ருட்டி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 4 பேர் பலி 80 பேர் படுகாயம்

Saraswathi Updated:
பண்ருட்டி அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து - 4 பேர் பலி 80 பேர் படுகாயம்Representative Image.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில், 4 பேர் உயிரிழந்துள்ளனர். 80 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகிலுள்ள  பட்டாம்பாக்கம் என்ற இடத்தில் இன்று காலை இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இரு தனியார் பேருந்துகளும் பலத்த சேதமடைந்தன. இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 80 பேர் ஆம்புலன்ஸ்கள் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து கடலூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், காவல் கண்காணிப்பாளர் ராஜாராமன் உள்ளிட்டோர் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து, தேவையான சிகிச்சைகளை அளிப்பதற்கான ஏற்பாடுகளை கவனித்துவருகின்றனர். 

விபத்துக்குள்ளாகி சேதமடைந்த தனியார் பேருந்துகளை அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறையினரும், மீட்புக்குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிகளை பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் ச. வேல்முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்