ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில் 25 வயதான தலித் பெண் ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
புகாரின்படி, அந்த பெண்ணுக்கு தெரிந்த குற்றம் சாட்டப்பட்டவர் முதலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ பதிவு செய்துள்ளார். பின்னர், அவர் பெண்ணிடம் பணம் பறித்துக் கொண்டு, மற்றவர்களுடன் சேர்ந்து மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்ததாகவும், எத்தனை பேர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அவரால் சொல்ல சொல்ல முடியவில்லை என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
குழந்தைகளைக் கொண்ட பாதிக்கப்பட்ட பெண், கடந்த ஒரு மாதத்தில் பலமுறை இதேபோல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகளால் தடுத்து வைக்கப்பட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது குழந்தைகளையும் கணவரையும் கொன்று விடுவதாகவும், வீடியோக்களை பகிரங்கப்படுத்துவதாகவும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பத்தன்று அவர் குற்றவாளிகளால் தடுத்துவைக்கப்பட்டிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு மயக்க மருந்து செலுத்தியதாக புகார்தாரர் கூறினார்.
அவர் வீடு திரும்பாததால், அவரது கணவர் காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர் செப்டம்பர் 27 அன்று பாதிக்கப்பட்ட பெண்ணை காவல் நிலையத்திற்கு வெளியே விட்டுச் சென்றுள்ளார்.
இதன் பின்னரே விஷயம் தெரியவந்து, அக்டோபர் 7ஆம் தேதி எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…