Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பெற்ற மகள்களை பல வருடமாக பாலியல் வன்கொடுமை செய்துவரும் தந்தை...மகளின் புகாரால் போலீசார் அதிர்ச்சி..!

madhankumar August 03, 2022 & 14:46 [IST]
பெற்ற மகள்களை பல வருடமாக பாலியல் வன்கொடுமை செய்துவரும் தந்தை...மகளின் புகாரால் போலீசார் அதிர்ச்சி..!Representative Image.

மகளுக்கு போதை மாத்திரை கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துவருவதாக தந்தை மீது மற்றொரு மகள் புகார் அளித்துள்ள சம்பம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது, அரியானா மாநிலம் பானிபட் தொழிற்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் புகார் ஒன்றை அந்த காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அதில் மூத்த மகளான தன்னை கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை செய்தார். இது பல நாட்கள் தொடர்ந்தது எனவும் தற்போது எனது தங்கைக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார். ஆசைக்கு இணங்குமாறு போதை மாத்திரை கொடுத்து உடலுறவில் ஈடுபட்டு வருகிறார் என கபுகார் அளித்துள்ளார்.

எனது தங்கையை எனது தந்தையிடம் இருந்து மீட்டு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார். தனது நண்பர்களின் உதவியுடன் இந்த புகாரை அந்த பெண் அளித்துள்ளார். புகார் அளித்ததை தொடர்ந்து புகாரை வாபஸ் வாங்கு என தனது தந்தை கொலை மிரட்டல் விடுவதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவரின் தந்தையும் பாதிக்கப்பட்ட பெண்களின் பாட்டி, எனது மகன் அப்படிப்பட்டவன் இல்லை அவன் ஒரு நிரபராதி, என கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாததால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என போலீசார் கூறியுள்ளனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்