எகிப்து நாட்டில் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மரணதண்டனையை டிவியில் நேரலையில் ஒளிபரப்பு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எகிப்து நாட்டில் செயல்பட்டு வரும் பல்கலைகழகம் ஒன்றில் படிக்கும் மாணவர் ஒருவர் அதே பல்கலைகழகத்தில் படிக்கும் சக மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரிடம் நடைபெற்ற தீவிர விசாரணையின் முடிவில் அவர் குற்றம் செய்தவர் என்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அந்த மாணவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியுள்ளது.
மேலும், இந்த மரண தண்டனையை வழங்குவதை நேரடியாக டிவியில் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், இனி ஒரு தவறு நடக்க கூடாது என்றால் மரணதண்டனையை நேரடியாக ஒளிபரப்புங்கள் எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…