ஒடிசா மாநிலத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் 14 மாணவர்களை ஆசிரியர் அடித்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அந்த மாணவர்களை அடித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒடிசா மாநிலத்தில் செயல்பட்டு வரும் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களை கணித ஆசிரியர் சரமாரியாக அடித்துள்ளார். இதனால் 14 மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இதில் 4 மாணவர்களுக்கு காயம் அதிகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இது குறித்து பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். மேலும், அந்த ஆசிரியரை பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…