நாடு முழுவது மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். மேலும் பீகார், உபி போன்ற மாநிலங்களில் 12 ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து தமிழகத்தில் சென்னையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், தடுப்பு முறைகளையும் மேற்கொண்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அக்னிபாத் திட்டம் இளைஞர்களை கொல்லும், ராணுவத்தை அழித்து விடும். அரசாங்கத்தின் நோக்கத்தை அமைதியான, ஜனநாயக மற்றும் அகிம்சை வழிகளில் வீழ்த்துங்கள். உண்மையுள்ள அரசாங்கத்தை கொண்டு வருவதும் நாட்டின் சொத்துக்களைப் பாதுகாப்பதுமே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். போராட்டத்தை நிறுத்த வேண்டாம், அமைதியான முறையில் போராடுங்கள். இது உங்கள் நாடு, உங்கள் உரிமை, இதைப் பாதுகாப்பது உங்கள் கடமை. காங்கிரசின் ஒவ்வொரு தலைவரும், தொண்டர்களும் உங்களுடன் இருக்கிறார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…