இராமநாதபுரத்தில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவிக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரின் பெற்றோர் இராமநாதபுரம் பாரதி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அங்கு, அந்த மாணவிக்கு மருத்துவர் ஜபருல்லா கான் (வயது 70) சிகிச்சை அளிக்காமல் பாலியர் ரீதியான சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் தெரிவிக்கவே அதிர்ச்சியான அவர்கள் மருத்துவர் மீது இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரி பேரில் ஜபருல்லா கானிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானது. இதையடுத்து மருத்துவரை பாலியல் தொல்லை செய்தது தொடர்பான பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து இராமநாதபுரம் கிளைச்சிறையில் அடைத்தனர். ஒரு டாக்டரே இந்த மாதிரியான செயலில் ஈடுபட்டுள்ளது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…