தென்காசி: ஆலங்குளத்தில் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அடுத்த நெட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக்குமார்(29). வழக்கறிஞரான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவருக்கும், இவரது உறவினரான ராணுவ வீரர் சுரேஷ் என்பவருக்கும் இடையே இட தகராறு இருந்து வந்துள்ளது. அசோக் குமாருக்கு ஆதரவாக அவரது பெரியப்பா துரைராஜ் என்பவரும் பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 27ஆம் தேதி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த அசோக்குமாரை, சுரேஷ் வீடு புகுந்து வெட்டியுள்ளார். அப்போது அவரை தடுக்க வந்த அவரது சகோதரி அருள்ஜோதி என்பவரையும் வெட்டியுள்ளார். தட்டிக் கேட்ட துரைராஜூவையும் வெட்டியுள்ளார். இதில் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துரைராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்த நிலையில், நாங்குநேரி நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சுரேஷ், அவரது தந்தை குழந்தைபாண்டி, உள்ளிட்ட நான்குபேரை கைது செய்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…