கோவை: அன்னூர் அருகே குடிப்பதை தட்டிக்கேட்ட காதல் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த முகாசெம்சம்பட்டியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார்.(28). இவரது மனைவி சூர்யா(26). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி சூர்யா தனது தந்தைக்கு போன் செய்து கணவர் குடித்துவிட்டு வந்து அடிப்பதாக கூறினார். இதையடுத்து மறுநாள் மகள் வீட்டிற்கு வந்த மாமனார் ஆறுமுகம், மகள் மற்றும் பேரக்குழந்தைகளை பொன்னேகவுண்டன்புதூரில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில் மாமனார் வீட்டிற் வந்த சந்தோஷ்குமார், மனைவியுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் மனைவி சூர்யாவை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு, தானும் மின்விசியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்ற அவரது மாமியார் வீட்டிற்கு வந்து பார்த்த போது, இருவரும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் உடனே இதுக்குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மேட்டுபாளையம் டிஎஸ்பி பாலாஜி நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…