Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வரதட்சணைக் கொடுமை; குடும்பத்தோடு கம்பி எண்ணும் ராணுவ வீரர்!

KANIMOZHI Updated:
வரதட்சணைக் கொடுமை; குடும்பத்தோடு கம்பி எண்ணும் ராணுவ வீரர்!Representative Image.

உளுந்தூர்பேட்டை அருகே மனைவியை அடித்து துன்புறுத்தி வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கணவருக்கு ஐந்து ஆண்டு சிறை தண்டனையும், பத்தாயிரம் அபராதமும் விதித்து அதிரடி தீர்ப்பு  வழங்கியுள்ளது. 

உளுந்தூர்பேட்டை அருகே பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணையன் மகன் முருகன் என்பவர் கடந்த 2008 ஆம் ஆண்டு செண்பகம் என்கிற சரஸ்வதியை திருமணம் செய்துள்ளார். ராணுவ வீரரான முருகன் திருமணத்திற்கு பிறகு வரதட்சனை கேட்டு செண்பகத்தை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்தி உள்ளார் . மேலும் சுந்தரி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டதாக கூறி   உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு செண்பகம் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜி வழக்கு பதிந்து விசாரணை செய்து வந்தார். 

இது தொடர்பான வழக்கு உளுந்தூர்பேட்டை இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில
நடைபெற்று வந்தது , பாதிக்கப்பட்ட செண்பகத்திற்கு அரசு வழக்கறிஞர் ஜான்சி ஆஜராகி வாதாடி வந்த நிலையில் இந்த வழக்கு தீர்ப்பு இன்று நீதிபதி வெங்கடேஷ் குமார் வாசித்தார். அப்போது செண்பகத்தின் கணவர் முருகன் என்பவருக்கு ஐந்து வருடம் சிறை தண்டனையும் ரூபாய் 10 ஆயிரம் அபராதமும் , முருகனின் தாய் கம்சல, தந்தை கண்ணையன், உறவினர்கள் கல்யாணி, சத்திரபதிஆகிய நான்கு பேருக்கும் தலா ஒரு வருடம் சிறை தண்டனையும் தலா ரூபாய் 2000 அபராதமும் விதித்து தீர்பளித்தார். 

 மேலும் முருகன் இரண்டாவதாக சுந்தரி என்று பெண்ணை திருமணம் செய்ததற்கான போதிய ஆதாரம் இல்லாததால் அவரை நீதிபதி விடுதலை செய்தும் உத்தரவிட்டார்.  மனைவியை வரதட்சணை கேட்டு அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்திய வழக்கில் ராணுவ வீரரான கணவருக்கு ஐந்து வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. நீதிபதியின் தீர்ப்பை தொடர்ந்து முருகன் உள்ளிட்ட ஐந்து பேரை உளுந்தூர்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்