சமீபத்தில் துருக்கி மற்றும் சிரியா நாட்டில் ஏற்பட்ட தொடர்ச்சியான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50000 க்கும் மேற்பட்ட மக்கள் பரிதாபாக பலியாகினர். உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மிகப்பெரிய துயர சம்பவம். ஆனால், அதைத் தொடர்ந்து உலகம் முழுவதும் தொடர்ந்து சில நாட்களாகவே நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்று நியூசிலாந்து நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நியூசிலாந்தில் ஆயிரக்கணக்கான நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் நியூசிலாந்தில் வெலிங்டன் மற்றும் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 6.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. அதைத்தொடர்ந்து இன்று நியூசிலாந்தின் வடக்கே உள்ள கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை சேதங்கள் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. இருப்பினும், 300 கி.மீ சுற்றளவில், மக்கள் வசிக்காத தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதுபோலவே நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் அதிகாலை 4.2 என்ற ரிக்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…