Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு..!!

Saraswathi Updated:
நீலகிரி, கோவை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் அறிவிப்பு..!!Representative Image.

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளட்ட நான்கு மாவட்டங்களில்  இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

மேற்குத் திசை காற்றின் வேகமாறு காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் காரைக்காலில் வரும் 20ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகள், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று நண்பகல் வரை கனமழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வங்கக் கடலில் தென்மாவட்ட கடலோரம், மன்னார்வளைகுடா, குமரிக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளில் மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுவீசும் என்றும், இதனால் மீனவர்கள் நாளை முதல் வரும் 18ம் தேதி வரை மீனவர்கள் இந்தப் பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்