தமிழகத்தில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேற்குத் திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், கோவை, நீலகிரி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
நாளை (ஜூலை.15) முதல் வரும் 20ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு பகுதிகளில் இலேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…