Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

saraswathi Updated:
10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்புRepresentative Image.

தமிழகத்தில் சேலம், தர்மபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியின்மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சேலம், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதேபோல், தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் அடுத்த 7 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 10 மாவட்டங்களைத் தவிர, ஈரோடு உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் இன்று பிற்பகல் முதல் இடி மின்னல் மற்றும் இலேசான காற்றுடன் மழை பெய்துவருவது குறிப்பிடத்தக்கது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்