Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! | Rain Alert Today

Saraswathi Updated:
சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! | Rain Alert TodayRepresentative Image.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

மேற்குத்திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் கடந்த 2 வாரங்களாக பரவலாக மழை பெய்துவருகிறது. கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும் பெய்தது.

இந்நிலையில், வவரும் 13ம் தேதி வரை இந்த மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது.   

இந்நிலையில், இன்று சென்னை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இலேசான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. அந்த வகையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய வடமாவட்டங்களுக்கும், நீலகிரி, கோவை ஆகிய மேற்கு மாவட்டங்களிலும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இலேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்