தன்னுடைய காதலை பிரேக் அப் செய்துவிட்டு, நள்ளிரவில் தோழிகளுடன் ஜாலியாக பிறந்த நாள் கொண்டாடிய முன்னாள் காதலியை காதலன் தாக்கி மண்டையை உடைத்த சம்பவம் குமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கல்லுக் கூட்டத்தை சேர்ந்தவர் ஜாபியா ஜாஸ்மின் (19). இவர் கருங்கல் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். இவர் சுங்கான் கடை பகுதியைச் சேர்ந்த அஜின் என்பவரை காதலித்து வந்தததாகவும், பின்னர் அந்த காதலை ஜாஸ்மின் பிரேக் அப் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலைநில், நேற்று முன்தினம் இரவு ஜாஸ்மின் தனது தோழிகள் இருவர் மற்றும் ஒரு நண்பருடன் நள்ளிரவில் வீட்டு மொட்டை மாடியில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். அப்போது வீட்டின் ஓரத்தில் இருந்த புளியமரம் மூலமாக ஏறி மொட்டை மாடிக்கு வந்த அஜின் தகாத முறையில் பேசி, ஜாஸ்மினை தாக்கிவிட்டு தப்பியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த ஜாபியா ஜாஸ்மின் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சம்பவம் தொடர்பாக குளச்சல் போலீசார் அஜின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஜாபியா ஜாஸ்மினும், அஜினும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், பின்னர் கருத்து வேறுபாட்டால் ஜாபியா காதலை முறித்து கொண்டதாகவும் தெரிகிறது. இதனால் கோபத்தில் இருந்த அஜின், இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…