தென் கொரியா நாட்டை சேர்ந்த பெண்ணை மும்பை வீதியில் வாலிபர் ஒருவர் மானபங்கம் செய்த வீடியோவால் பரபரப்பு.
சமீபத்தில் ட்விட்டரில் தென் கொரியா நாட்டின் பிரபல யூடியூபர் மும்பை புறநகர் கர் பகுதியில் லைவ் ஸ்ட்ரீமிங்கில் இருக்கும் போது வாலிபர் ஒருவர் மானபங்கம் செய்யும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த வீடியோவில் அந்த பெண் நடந்து செல்லும் போது ஒருவர் அவருக்கு மிக அருகில் வந்து கையை பிடித்து இழுத்துள்ளார். ஆனால் தன்னை விடுமாறு அந்த பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால் அவர் அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.
பிறகு அந்த பெண் அரைகுறை ஆங்கிலத்தில் திட்டிவிட்டு சென்றுள்ளார். அந்த நபரோ பைக்கில் தன்னுடைய நண்பருடன் வந்து லிப்ட் தருவதாக தகராறு செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து எந்த புகாரும் வரவில்லை, நாங்களாவே தான் இந்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளோம் என்று காவல் துறையினர் கூறியுள்ளனர். ஷேக் மற்றும் அன்சாரி என்பவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து அந்த பெண் பதிவிட்டுள்ளார், "இந்த நாட்டில் இது தான் நடக்கிறது. ஏதேனும் தப்பு நடந்து விட்டால் அதற்கு பெண் தான் காரணம். இந்த சம்பவத்திற்கும் உரையாடலில் நான் மிகவும் நட்பான விளம்பரத்தில் ஈடுபட்டதால் தான் இவ்வாறு நடந்தது என்று கூறுகின்றனர். எது நடந்தாலும் ஆண்கள் எந்த தவறும் செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…