கடன் தொல்லையால் அன்றாட செலவிற்கு திண்டாடும் தந்தை விரக்தியில் தன்னுடைய இரண்டரை வயது குழந்தையை மார்போடு அணைத்து கொன்றுள்ளார்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் 45 வயதான ராகுல் பர்மர். இவர் பெங்களூரில் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்தார். அங்கு ஐடி நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருந்த அவரை வேலையை விட்டு அனுப்பிவிட்டது நிறுவனம். தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் கிரிப்டோகரென்சியில் முதலீடு செய்து அனைத்தையும் இழந்து விட்டார். வீட்டில் தன்னுடைய மனைவியின் நகையை அடமான வைத்து அன்றாட செலவுகளை சமாளித்து வந்துள்ளார்.
தன்னுடைய மனைவியும் நகை எங்கே என்று கேட்கும் போது, நகை திருடு போய் விட்டது என்று பொய் சொல்லி தப்பித்துள்ளார். இருப்பினும் நாளுக்கு நாள் ஏற்படும் செலவுகளால் சாப்பாடு கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பவத்தன்று குழந்தையை ஸ்கூலில் இருந்து அழைத்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி காரில் சென்றுள்ளார் ராகுல். பின்பு தன்னுடைய குழந்தையுடன் மனதார விளையாடி சாப்பிட அனைத்தையும் வாங்கி தந்துள்ளார்.
சிறிது நேரம் கழித்து மீண்டு குழந்தை பசிக்கிறது என்று அழுக ஆரம்பித்துவிட்டது. எனவே, ராகுல் தன்னுடைய குழந்தையை தூக்கி மார்போடு அணைத்து நசுக்கி மூச்சு திணற விட்டு கொடூரமாக கொன்று விட்டார். பின்னர் பெங்களூரு கோலார் நெடுஞ்சாலையில் உள்ள ஏரியில் குழந்தையின் உடலை வீசி விட்டு அவரும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவர் எப்படியோ உயிர் தப்பிவிட்டார், பின்னர் எங்கு செல்வது என்று தெரியாமல் சுற்றிக்கொண்டிருக்கும் போது போலீசாரிடம் மாடிள்ளார். விசாரணையில் கடன் தொல்லை என்னுடைய மகளுக்கு ஏற்பட கூடாது என்பதற்காக தான் இப்படி செய்தேன் என்று ஒப்புக்கொண்டார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…